வம்பிலுத்து வருபவனை
வாசலில் நின்று
வாரி அனைப்பாள்
தன் புறம் மறைத்து வைத்து
புறம் பேசி விரட்டிடுவாள்
தமையன் அவன் தங்கம்
என மார்த்தட்டி கூவிடுவாள்
கண் பார்த்து மனம் படிப்பாள்
வலிக்காமல் அடித்திடுவாள்
தன் கண்ணைக் கசக்கிடுவாள்
கட்டியனைத்து காயத்திற்கு மருந்திடுவாள்
தாமதிக்காமல் தட்டை நிரப்பி தந்திடுவாள்
வீம்பு பிடித்தால் கை நிறைய அள்ளி
வாய் நிறைய ஊட்டிடுவாள்
மடியில் தலை சாய வைத்து
தலைகனத்தை சீவிடுவாள்
ஒவ்வொரு நிமிடமும் தாயாகிறால்
என் குழந்தைத்தால்..
கேசவன் கவிதைகள்