எண்ணிய நாட்கள்

கிசோர் கவி
1
இருள் என்னை விழுங்கிய நாட்கள் 
  தமிழ் என்னை துரத்திய நாட்கள்.
என் நிலை கண்டு பேனாவும் 
  இரத்த கண்ணீர் வடித்த நாட்கள். 
சில கடின நினைவுகளை மறக்க 
  கற்பனையில் மிதந்த நாட்கள்.
இருளில் வெளிச்சத்தை தேடி 
  அலைந்த அந்த நாட்கள். 
ஏமாந்த பொழுதும் சிரித்து 
  கடந்த அந்த நாட்கள். 
கற்பனையில் கிறுக்கிய கவிதைகள் 
  ஆறுதலாக இருந்த நாட்கள். 
நெருப்பு என்னை விழுங்கும் போது தான் 
  இந்த நிலை மாறுமோ – இல்லை
இந்த நாட்களிலும் கூட இருந்த 
  இறைவா உனக்கு – நன்றி.

ஆசிரியர் : கேசவன் 

Post a Comment

1Comments

Please Select Embedded Mode To show the Comment System.*