ஒன்றரை வருடமாக என்னிடம் ஆலமரம், நவாமரம் ஆகிய மூன்று விதைபந்துகள் இருந்தது. தங்கையின் நட்பு அதை என் தங்கைக்கு பரிசாக கொடுத்தாள். அவள் உடன் பிறப்பின் திருமணத்தில் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு மொய்பையுடன் விதைபந்துக்களையும் கொடுத்துள்ளனர். அதில் இருந்து ஒரு பெட்டியை பள்ளிகூடத்திற்க்கு எடுத்துகொண்டு வந்து என் தங்கைக்கு கொடுத்தாள். அந்த பெட்டிக்குள் மூன்று விதை பந்துகள் இருந்தது. இரண்டு நவா மரமும் ஒரு ஆலமரமும் அடங்கியவை. அதை இவ்வளவு நாட்களாக ஒன்றுமே செய்யாமல் அப்படியே வைத்திருந்தேன். தற்பொழுது தான் அதை பயன்படுத்திவிடலாம் என்ற எண்ணம் வந்தது. உடனே மூன்று நெகிழி பைகளை எடுத்து அதில் மண்ணை நிரப்பி விதையை அதில் முளைக்க வைத்துள்ளேன். இரவு நேரத்தில் நினைவு வந்ததால் இரவு நேரத்திலேயே வைத்துவிட்டேன்.
இயற்க்கை தான் எல்லாம் ஆ! மரம் நட வேண்டும், ஆ! உலகத்தை காப்பாத்த வேண்டும் என்ற அளவுக்கு நான் இயற்க்கையாளர் கிடையாது. மரம் செடி வளர்ப்பை ஒரு கலையாக பார்க்கிறேன். என்னை சுழியியல்வாதியாக பார்க்க வேண்டாம்.
படம்: ஒன்று
மூன்று விதை பந்துகள் |
படம்: இரண்டு
மண்ணால் நிரப்பப்பட்ட நெகிழிப்பை |
படம்: மூன்று
மண்ணால் நிரப்பப்பட்ட நெகிழிப்பை மண்ணுக்குள் விதை பந்தை வைத்தல் |
படம்: நான்கு
மண்ணால் மூடுதல் |
எழுத்து : கிசோர் கவி