கவிதை எண் 12: பெரிய உலகத்தில் சிறு புள்ளி

கிசோர் கவி
2

பெரிய உலகத்தில் சிறு புள்ளியாய், கடலில் தொலைத்த ஊசியாய்  உன்னை தேடிக்கொண்டே இருக்கின்றேன்.
யாரோ ஒருவர் உன் பெயர் சொன்னால் நீ இல்லை என்று தெரிந்தும் திரும்பிப் பார்க்கிறேன்.
உனக்கு தெரிந்தவர்களாக இருக்கக்கூடும் என்று நான் நினைப்பவர்களை எல்லாம் நண்பர்களாக்கிக் கொள்ள முயலுகிறேன்.
உன் நண்பர்களின் வீட்டு விசேஷங்களை நான் தவற விடுவதேயில்லை.
உனக்காக தான் வருகிறேன் என்று அவர்களுக்கு எப்படி புரிய வைப்பது.
உன்னை தொலைத்துவிட்டு தேடிக் கொண்டிருக்கிறேன்.

 

கேசவன் கவிதைகள்

Post a Comment

2Comments

Please Select Embedded Mode To show the Comment System.*