"புன்னகை தேசத்தில் புலரும் கனவு"
புன்னகை முகத்தில் மலர,
பூவோடு அவளும் நகர,
புதுமை அகத்தில் ஒளிர,
பூத்தது மனதில் கனவுதானோ.
ஆசை எங்கும் அலை மோத;
வயதின் எல்லை மலை ஏற;
கவலை கண்ணில் நிலைமாற;
கரைந்து நானுமோ உருமாற;
கனவிலே காண்கிறேன் உன் முத்தமடி.
கலைந்து நானும் எழுகிறேன்,
கைகள் முழுவதும் இரத்தமடி.
உன் புன்னகை சிதறல் கண்டாலே
நான் உறைவது ஏனடி.
என் உலகம் உன் விழிகளிலே
கண் உறங்கிறதே அதை பாரடி.
உன் நிழலின் அசைவு கண்டாலே
என் கைப்பேசி வாய் மூடுமோ.
உன் கண்கள் என்னைப் பார்த்தாலே,
என் மனதில் தேன் ஊருமோ.
உன் புன்னகைத் தேசத்தில்
எனக்காய் சில பூக்கள் பிறக்காதா.
என்று என்றும் மனமோ ஏங்குதோ..
உன் நினைவில்
கேசவன் கவிதைகள்