பிணி காலத்திலும்;
பணியென்று பாராமல்;
நலம் விசாரித்து!
மனச்சுமையை போக்கி!
காயம்பட்டோரை-
கண்மணியாய் காத்து!
ஆறுதல் மொழி பேசி;
அன்பை மருந்தில் கலந்து!
தளர்ந்த மனதை -
தாயுள்ளத்தோடு வருடி;
தன்னலமற்ற சேவையில்
தனக்குநிகர் உண்டோ? என -
செய்யும் தொழிலையும்
சேவையாய் செய்கின்ற;
நீங்கள் தானே
மனிதரில்
புனிதர்!
கேசவன் கவிதைகள்